Showing posts with label நகைச்சுவை / நையாண்டி. Show all posts
Showing posts with label நகைச்சுவை / நையாண்டி. Show all posts

Thursday, December 18, 2008

488. இந்திய அம்மாவா சும்மாவா?

குமாரை பார்க்க ஊரிலிருந்து அவனது அம்மா வந்திருந்தார். குமாரின் ரூம்மேட் ஒரு பெண், பெயர் ரம்யா.

ரம்யாவின் கைவண்ணத்தில் அம்மாவுக்கு இரவு விருந்து தயாரானது. சாப்பிடும்போது, குமாரின் அம்மா, 'இந்த ரம்யா இவ்வளவு அழகாக இருக்கிறாளே, குமாருக்கும் இவளுக்கும் இடையே ரூம்மேட் தாண்டிய உறவு இருக்குமோ?' என்று எண்ணினாள். இந்த சந்தேகம் அவளுக்கு கொஞ்ச காலமாகவே இருந்து வந்தது. இப்போது, குமார்-ரம்யா இடையே ஆன நெருக்கமும் அவர்களது நடவடிக்கைகளும், அம்மாவின் சந்தேகத்தை அதிகப்படுத்தின!

அம்மாவின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட குமார், "அம்மா, நீங்கள் நினைப்பது போல இல்லை, நானும் ரம்யாவும் வெறும் ரூம்மேட்ஸ் தான்" என்றான்!

அம்மா ஊருக்குச் சென்று ஒரு வாரம் கழித்து, ரம்யா குமாரிடம், "உங்கள் அம்மாவுக்கு விருந்தளித்த நாளிலிருந்து, வீட்டில் இருந்த எனது வெள்ளித் தட்டைக் காணவில்லை. உங்கம்மா எடுத்துக் கொண்டு போயிருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை தானே?!?" என்று கேட்டாள். குமார்,"இருக்காது, எதற்கும் அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதி விசாரிக்கிறேன்!" என்றான்.

குமார் சாமர்த்தியமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு இப்படி எழுதினான்:
அன்பான அம்மா,
நலம் நலமறிய ஆவல். நீங்கள் இந்த வீட்டிலிருந்து ஒரு வெள்ளித்தட்டை எடுத்துச் சென்றீர்கள் என்று சொல்ல வரவில்லை. அது போல, நீங்கள் அதை எடுத்துச் செல்லவில்லை என்றும் என்னால் கூற முடியவில்லை. விஷயம் என்னவென்றால், நீங்கள் இங்கு விருந்து சாப்பிட்டுச் சென்றதிலிருந்து அந்தத் தட்டைக் காணவில்லை!
--- குமார்

ஒரு பத்து நாட்கள் கழிந்தபின், அம்மாவிடமிருந்து பதில் கடிதம் வந்தது:
அன்புள்ள குமார்,
நலம் நலமறிய ஆவல். நீயும் ரம்யாவும் ஒரே படுக்கையில் உறங்குவதாக நான் சொல்ல வரவில்லை, அதே நேரம், நீயும் அவளும் ஒரே படுக்கையில் உறங்குவதில்லை என்றும் என்னால் கூற முடியவில்லை!

விஷயம் என்னவென்றால், ரம்யா அவளது படுக்கையில் உறங்குபவளாக இருந்தால், இந்நேரம் அந்த வெள்ளித் தட்டை கண்டு பிடித்திருப்பாள், அவளது படுக்கையில் தலையணைக்கு அடியில் !?!?

இப்படிக்கு
அன்புள்ள அம்மா

கதையின் நீதி:
அம்மாவிடம் பொய்மை கூடாது, அதுவும் இந்திய அம்மாவிடம் கூடவே கூடாது :-)

எ.அ.பாலா

Thursday, November 06, 2008

466. நீதிமன்றத்தில் வக்கீல்கள் செய்யும் காமெடி

வக்கீல்: அவளுக்கு 3 குழந்தைகள், சரியா ?
சாட்சி: ஆம்
வக்கீல்: எவ்வளவு மகன்கள் ?
சாட்சி: ஒன்று கூட கிடையாது
வக்கீல்: எவ்வளவு மகள்கள்?
சாட்சி: என்ன, என்னை நக்கல் செய்கிறீர்களா ? கனம் நீதிபதி அவர்களே, எனக்கு இந்த வக்கீல் தேவையில்லை, வேறு வக்கீலை ஏற்பாடு செய்ய முடியமா ????


வக்கீல்: உங்களின் முதல் திருமணம் எவ்வாறு முடிவுக்கு வந்தது ?
சாட்சி: மரணத்தின் வாயிலாக
வக்கீல்: யாருடைய மரணத்தினால்?
சாட்சி: தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் ????


வக்கீல்: அந்த நபரை விவரிக்க முடியுமா?
சாட்சி: அவர் நடுத்தர உயரமாக, தாடியும் வைத்து இருந்தார்.
வக்கீல்: அந்த நபர் ஆணா பெண்ணா ?
சாட்சி: நீங்கள் கண்டுபிடியுங்களேன் !?!?!


வக்கீல்: நான் உங்கள் வக்கீலுக்கு அனுப்பிய நோட்டீஸை முன்னிட்டுத் தானே, இக்காலையில் இங்கு தங்களின் தோற்றம் அமைந்தது?
சாட்சி: இல்லை, நான் பணிக்குச் செல்கையில் பொதுவாக இப்படித் தான் அலங்கரித்துக் கொள்வேன்!?!?


வக்கீல்: டாக்டர், எத்தனை பிரேதப் பரிசோதனைகள் தாங்கள் இறந்தவர்கள் மீது செய்து இருக்கிறீர்கள் ?
சாட்சி: என்னுடைய அனைத்து பிரேதப் பரிசோதனைகளும் இறந்தவர்கள் மீதே நடந்துள்ளன!!! அதே கேள்வியை சற்று மாற்றி அமைத்துக் கேட்க தங்களுக்கு விருப்பமா ?!?!


வக்கீல்: தங்களின் அனைத்து பதில்களும் வாய்மொழியாக இருத்தல் அவசியம், சரியா? நீங்கள் எந்தப் பள்ளிக்கு சென்றீர்கள்?
சாட்சி: வாய்மொழி!?!?!


வக்கீல்: தாங்கள் எத்தனை மணிக்கு பிரேதத்தை பரிசோதித்தீர்கள் என்பதை நினைவு கூர முடியமா?
சாட்சி: பிரேதப் பரிசோதனை இரவு 8.30 மணிக்குத் தொடங்கியது
வக்கீல்: திரு.ரகுராமன் அந்நேரம் இறந்து போயிருந்தாரா ?
சாட்சி: இல்லை, அவர் பரிசோதனை மேஜையின் மீது அமர்ந்தவாறு, நான் ஏன் இந்த பிரேதப் பரிசோதனையை அவர் மீது செய்து கொண்டிருந்தேன் என்ற ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தார் !?!?!

வக்கீல்: இந்த மையஸ்தேனியா கிராவிஸ் (myasthenia gravis) ஆனது தங்களின் நினைவாற்றலை பாதிக்குமா?
சாட்சி: ஆம்
வக்கீல்: எவ்வகையில் அது தங்கள் நினைவாற்றலை பாதிக்கிறது ????
சாட்சி: எனக்கு மறதி ஏற்படுகிறது !!!
வக்கீல்: ஓ மறதியா ? நீங்கள் மறந்தது குறித்து ஏதாவது எடுத்துக்காட்டு தர இயலுமா ?!?!?!

வக்கீல்: காலை எழுந்தவுடன் உங்கள் கணவர் உங்களிடம் என்ன கேட்டார் ?
சாட்சி: அவர், "சுசீலா, நான் எங்கிருக்கிறேன்?" என்றார்
வக்கீல்: அக்கேள்வி தங்களை ஏன் கோபம் கொள்ள வைத்தது?
சாட்சி: ஏனெனில், என் பெயர் ஜானகி !?!?!


கீழுள்ளது தான் best of the best :)

வக்கீல்: டாக்டர், தாங்கள் பிரேதப் பரிசோதனையைத் துவங்குவதற்கு முன், நாடித்துடிப்பை கவனித்தீர்களா ?
சாட்சி: இல்லை
வக்கீல்: ரத்த அழுத்தத்தை சோதித்தீர்களா ?
சாட்சி: இல்லை
வக்கீல்: சுவாசம் உள்ளதா என்று பார்த்தீர்களா ?
சாட்சி: இல்லை
வக்கீல்: எனவே, தாங்கள் பிரேதப் பரிசோதனையைத் தொடங்கிய சமயம், அந்த நோயாளி உயிரோடு இருந்திருக்கக் கூடிய சாத்தியம் உள்ளது, அப்படித் தானே ?
சாட்சி: இல்லை
வக்கீல்: எப்படி அதை அவ்வளவு நிச்சயமாக உங்களால் கூற முடிகிறது ?
சாட்சி: ஏனெனில், அம்மனிதரின் மூளையானது எனது மேஜையின் மீதிருந்த ஒரு குடுவைக்குள் அமர்ந்திருந்தது !?!?
வக்கீல்: ஓ அப்படியா? இருந்தும், அபோது அந்த மனிதர் உயிரோடு இருந்திருக்க சாத்தியமா???
சாட்சி: உண்டு, அம்மனிதர் உயிரோடு இருந்திருக்கவும், சட்டம் பயின்று கொண்டிருக்கவும் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவே உணர்கிறேன் !?!?!?


பி.கு: மேற்கூறப்பட்டவை எல்லாம், அமெரிக்க நீதிமன்றங்களில் நிஜமாகவே பேசப்பட்டவை என்பதை தயவு செய்து நம்புங்கள் :) வக்கீல்கள் எப்பேர்ப்பட்ட புத்திசாலிகள் என்று உங்களுக்கு ஒரு ஐடியா கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன் ;-)

எ.அ.பாலா

நன்றி: Disorder in the American Courts

Sunday, December 09, 2007

Star22b. சன் டிவியின் பக்தித் தொடர் - 'ராஜ ராஜேஸ்வரி' *மீள்பதிவு*

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

நான் பொதுவாக இது போன்ற பக்திப் பரவசமும், மாயமந்திரமும் நிறைந்த தொடர்களை பார்ப்பது கிடையாது. நேற்று (30-1-2005) இரவு பொழுது போகாமல், என் மகள்களுடன் அமர்ந்து 'ராஜ ராஜேஸ்வரி' தொடரைப் பார்த்தேன். இதை விட சிறப்பாய் மக்களை முட்டாளாக்க முடியாது என தோன்றுமளவுக்கு, பக்தி உணர்வை காமெடி ஆக்கும் வகையில், பல 'திடுக்' காட்சிகள் கொண்ட சூப்பரான ஒரு தொடர் இது! பகுத்தறிவுப் பாசறையிலிருந்து உதயமானவர்கள்(!), இது போன்ற மூட நம்பிக்கைகளை வளர்க்கும் செயல்களில் ஈடுபடுவது தான், கேலிக்கூத்தின் உச்சக்கட்டம்! வியாபார நோக்கு அவசியம் தான். ஆனால், நம்பத்தகாத வகைக் காட்சிகளை, உலகம் முழுதும் பார்க்கும் டிவியில், வரையறை இல்லாமல் வாராவாரம் ஒளிபரப்பி இலாபம் ஈட்ட வேண்டுமா என்பதே கேள்வி!

இத்தொடரை பார்ப்பதன் விளைவாக என் மகள்கள் பக்தி நிறைந்தவர்களாக ஆகிறார்களோ இல்லையோ, சீக்கிரமே 'Missile Technology' பற்றி சந்தேகங்களை கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்! நேற்று இத்தொடரில், நீலி என்ற நல்ல ஆவிக்கும், மாயச்சாமி மற்றும் வள்ளி என்ற இரண்டு தீயவர்களுக்கும் (கெட்டவரில் ஒருவர் ஆண், ஒருவர் பெண் --- இதிலெல்லாம் நன்றாக சமத்துவம் காட்டுவார்கள்!) இடையே நடக்கும் மந்திர, தந்திர போராட்டத்தை விலாவாரியாக காண்பித்தார்கள். இப்போராட்டமே, ஆவியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோயிலில் இருந்து ராஜியை (தொடரின் கதாநாயகி) மண்ணெடுக்க விடாமல் (எதற்கு என்று எனக்குத் தெரியாது? வீடு கட்டுவதற்காக இருக்கலாம்! ) தடுப்பதற்காகத் தான்!


வில்லன்கள் இருவரும் அக்னி வளர்த்து, ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தபடி, தங்கள் கைகளால் தலையை இடமும் வலமுமாக சுற்றி கோணங்கித்தனம் செய்தவுடன், ஒரு லேசர் வகை ஆயுதம் அக்னியிலிருந்து புறப்பட்டு, வானை நோக்கி சீறிப் பாய்கிறது!!! சாதாரணமாக வாய் ஓயாமல் பேசும் என் இரண்டாவது மகளிடமிருந்து (3 வயது) அடுத்த 20 நிமிடங்கள் பேச்சே இல்லை! அந்த ஏவுகணை கிளம்பிய மறுகணமே அதை உணர்ந்து விடும் நீலி ஆவி (நடிகை கீர்த்தனா!) குழந்தைகள் அலறும் வண்ணம் பயங்கரமாக 'பேய்' முழி முழித்து, தனது உள்ளங்கையிலிருந்து வெளிப்படும் ஓளியினால் கோயிலுக்கு (கோபுரத்தையும் சேர்த்து!) ஒரு Electromagnetic தடுப்பு வலையை உண்டாக்குகிறது. 'கொடியவர்களின் கூடாரத்தில்' உதித்த ஏவுகணை அத்தடுப்பு வலையில் மோதிப் பார்த்து சலித்து திரும்பி எங்கோ போய்விடுகிறது!

தீயவர்கள் இன்னொரு ஆயுதம் நெருப்பிலிருந்து தயாரித்து ஏவுகிறார்கள்! நீலி ஆவி பதில் ஆயுதம் உருவாக்கி அதை பஸ்பம் ஆக்குகிறது. அடுத்து, இருவரது சக்தியையும் ஒருங்கிணைத்து ஒரு கொடிய மிருக வடிவ லேசர் பொம்மையை உருவாக்கி, இம்முறை நீலியையே அழிக்க அனுப்புகிறார்கள்! என் மகள்கள் "அப்பா, நீலி செத்துடுவாளா?" எனக் கேட்டனர், நீலி ஏற்கனவே செத்த ஓர் ஆவி என்பதை உணராமல்! நானும் 'நீலி காலி' என்று தான் நினைத்தேன்! ஆனால் நீண்ட கூந்தல் கொண்ட நீலி ஆவியோ
"உனக்கும் பெப்பே, உன் பாட்டனுக்கும் பெப்பே!" என்ற வகையில், அந்த தாக்குதலையும் முறியடித்து ஒரு இடிச்சிரிப்பு சிரித்தது பாருங்கள், எனக்கே கதி கலங்கி விட்டது!! என் மகள்களோ பயமின்றி ரசித்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள் தான் வாராவாரம் பிசாசையும், பூதத்தையும் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே!!!

அதற்கடுத்து, நீலி ஆவி நேராக கொடியவர்கள் முன் அகாலமாகத் தோன்றி, தாக்குதலை நிறுத்துமாறு அவர்களை எச்சரிக்க, அதை மதிக்காமல் திமிராகப் பேசும் இருவரையும், 'டொய்ங்' என்ற சத்தத்துடன், காணாமல் போக வைக்கிறது! அடுத்த வாரம் மாயச்சாமியும், வள்ளியும் மறுபடியும் உயிர் பெற்று விடுவார்கள் என்று என் மூத்த மகள் அடித்துக் கூறினாள்! இது போன்று பல சீரியல்கள் அவள் பார்த்ததால் விளைந்த ஞானத்தின் பயன்!!! அதே சமயம் கோயிலில், நான் மேலே குறிப்பிட்ட தொடரின் கதாநாயகி ராஜி, பக்திப் பரவசத்துடன், கண்ணில் நீர் மல்க, கோயிலில் எந்த இடத்தில் மண் எடுத்தால் நல்லது என்றுரைக்குமாறு கருப்புசாமியிடம் கோரிக்கை விடுக்கிறாள். இத்தொடரில் முணுக்கென்றால் கேட்டவரின் முன் பிரத்யட்சம் ஆகும் தெய்வம், இம்முறை (for a change) ராஜி முன் தோன்றாமல், கருப்புசாமியின் அருவாள் பதித்த இடத்தைச் சுற்றி ஒரு லேசர் ஒளி வட்டம் இட்டு, அவ்விடத்திலிருந்து மண் எடுக்குமாறு ஸிம்பாலிக்காக உணர்த்துகிறது!!! ராஜி மண்ணை எடுத்து ஒரு குடத்தில் இட, இதற்கு மேல் சீரியலைப் பார்த்தால் எனக்குள்ள தெய்வ பக்தியும் போய், புத்தியும் பேதலிக்கும் வாய்ப்பிருப்பதை உணர்ந்த நான், வீட்டை விட்டு 'எஸ்கேப்' ஆனேன்!!!!!!

இத்தொடரின் காட்சிகளில் தெரியும் தொழில்நுட்பம், அந்தக் காலத்து மகாபாரதத் தொடரில் வருவது போல் இல்லாமல் (ஒரு டிவித்தொடர் லெவலுக்கு) much better எனத் தோன்றியது. ஆனாலும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்றவர்கள், கற்கால டைனாசர்களை நம் முன் கொணர்ந்து நிறுத்த தற்கால தொழில்நுட்பத்தை பயன்படுத்த, நாம் என்ன செய்கிறோம் பாருங்கள்! தொழில்நுட்பத்தை கேலிக்கூத்துக்கு துணையழைக்கிறோம்!
ராஜ ராஜேஸ்வரியே துணை!

'பிச்சைப்பாத்திரம்' சுரேஷ் கண்ணன் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், ராஜி - டகிள்பாஜி

(சுரேஷ் கண்ணன் 'ஏய்' திரைப்படத்தை விமர்சித்து எழுதிய தனது ஒரு பதிவில், "ஏய் - ஒரு ஆய்" என்று முத்தாய்ப்பாக ஒரு வரியுடன் பதிவை முடித்திருந்தார் :))

என்றென்றும் அன்புடன்,
பாலா

***********************
இப்பதிவுக்கு அப்போது வந்த பின்னூட்டங்கள்:


Suba said...
இந்த தொடர் மாத்திரமல்ல, பொதுவாகவே தமிழக சின்னதிரைத் தொடர்களில் பக்தி மயத்தை உணர்த்தும் வகையில் வெளிவருபவை எல்லாமே இதே மாதிரிதான். பார்ப்பவர்களை முட்டாளாகவும் சமயத்தை மாந்திரீகம் சார்ந்ததாகவும் காட்டுவதிலேயே கவனத்தைக் காட்டுகின்றனர். இது சமயத்தை வளர்ப்பதற்காக வெளிவருபவையாக எனக்குப் படவில்லை. மாறாக சமயத்தையும் தத்துவங்களையும் கீழ்மைப்படுத்திக் காட்டும் முயற்சியாகத் தான் எனக்குப் படுகின்றது. ஜெர்மனியிலும் சன், K, ஜெயா ராஜ் டிவிகள் உலவுவதால் அவ்வப்போது இந்தத் தொடர்களைப் பார்த்து நானும் பயப்படுவதுண்டு..!

10:48 PM, January 31, 2005

பினாத்தல் சுரேஷ் said...
Bala,

Sun TV is doing a wonderful job of spreading Periyar's atheist preachings through these serials! Sure -- at least 10% of the audience would have turned "nathigargal" by now.

9:23 AM, February 01, 2005

இளவஞ்சி said...
Technology-ய் உபயோகித்து ஸ்பீல்பர்க் டினாசோர் மட்டுமா காட்டினார்? indiana jones ல் இல்லாத மாயாஜால காட்சிகளா? இப்போகூட vanheil raising என்ற ஆங்கில பேய் படம் வந்ததே... ராஜராஜேஸ்வரியெல்லாம் ஒன்றுமேயில்லை...
அறிவாளிகள் வேண்டியதை தேடிக்கொள்கிறார்கள். நம்மைப்போன்ற கிடைத்ததை அனுபவிக்கும் சராசரிகளுக்கு எல்லா ஊரிலும் ஒரே சரக்குதான்.. பாட்டிலு தான் வெற..

4:23 PM, February 01, 2005

enRenRum-anbudan.BALA said...
இளவஞ்சி,

கருத்துக்களுக்கு நன்றி! ஆனால், சத்தியமாக, ஸ்பீல்பெர்க் காட்டியவைகளையும், சன்டிவியின் மாயாஜாலக் காட்சிகளையும் equate செய்வதை ஒப்புக் கொள்ள இயலாது :-)

எல்லாரும் திரைப்படங்களையே விமர்சனம் செய்கிறார்களே என்று ஒரு மாறுதலுக்காக ஒரு டிவித் தொடரை பற்றி விமர்சனம் செய்ய, என் பாணியில்(!) முயன்றேன்! அவ்வளவே.

என்றென்றும் அன்புடன்
பாலா

5:20 PM, February 01, 2005

வசந்தன்(Vasanthan) said...
அவர்கள் தான் வாராவாரம் பிசாசையும்இ பூதத்தையும் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே!!!
டிவியில் பார்ப்பதென்ன சேர்ந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பின்னே எப்படிப் பயப்படுவார்கள். (புரிஞ்சுதா)

11:05 AM, February 15, 2005

Anonymous said...
வசந்தன்,

இது கூடப் புரியாத 'கொய்யான்' இல்லை நான் :-)

இருந்தாலும், இது கொஞ்சம் TOO MUCH இல்ல???

என்றென்றும் அன்புடன்,
பாலா


1:40 PM, February 15, 2005

வசந்தன்(Vasanthan) said...
கோவப்பட மாட்டியள் எண்டு நினைக்கிறன்.

6:07 PM, February 15, 2005

காஞ்சி பிலிம்ஸ் said...
பகுத்தறிவு பாசயறையா? அப்படி என்றால் என்ன? கருணாநிதிக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இருப்பதாக யார் சொன்னது? பெண்களின் கற்பை போற்றிய திருவள்ளுவரையே தாக்கிய பெரியார் எங்கே? பெண் அடிமைச் சின்னத்தின் முழு உருவமாகிய கண்ணகிக்கு சிலை வைத்து திருக்குறளில் உள்ள கற்பியலுக்கும் சேர்த்து குறளோவியம் படைத்து காசாக்கிய கருணாநிதி எங்கே. சந்தர்ப்ப வாத அரசியல் செய்து மதவாத பா.ஜா.காவுடன் கைகோர்த்த கருணாநிதியை இனி ஒரு முறை பகுத்தறிவாளர் என்று தயவு செய்து சொல்லாதீர்கள். பகுத்தறிவும் ஹிந்தி எதிர்ப்பும் தமிழ்நாட்டு முன்டங்களுக்கு மட்டுமெ சொல்லி, தனக்கும் தன் குடும்பத்துக்கும் அவைகளை விதிவிலக்காக்கியதை தமிழ்நாடு உணர்ந்து பல நாட்களாகிவிட்டது நன்பரே!

10:03 PM, February 15, 2005

Anonymous said...
Nice satire ...

12:50 AM, August 16, 2006
**********************
எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

Wednesday, December 05, 2007

Star11a. முதல் (II class) இரயில் பயணத்திற்கு தமிழில் வழிகாட்டி... (மீள்பதிவு)

ஊக்கம்: முகமூடியின் இப்பதிவு மட்டுமே!!!

இது இந்தியாவை (சென்னையிலிருந்து கிளம்பும் இரயில்களை!) மனதில் வைத்து மட்டுமே எழுதப்பட்டது. இரயிலில் கரன்ஸி, பர்ஸ் மற்றும் உடைமைகளுக்கு நீங்களே பொறுப்பு ! (இரயிலின் படங்கள் வேண்டுபவர்கள் எனக்கு ஒரு வரி மின்னஞ்சல் அனுப்புங்கள்...)

முன்னேற்பாடு

* உங்கள் லக்கேஜின் எடை பற்றியெல்லாம் கவலை வேண்டாம் (உங்களால் அதை தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா என்பது தவிர !!!)
* நெடுந்தூர பயணம் என்றால், இரயிலில் சாப்பிட புளிசாதம், இட்லி, சப்பாத்தி என்று வகையாக (சீக்கிரம் ஊசிப் போகாத அயிட்டங்களாக!) சாப்பாடு கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வழியில் வரும் ரயில் நிலையங்களில் கிடைக்கும் உணவை உண்டால் வயிறு புடுங்கிக் கொள்ளலாம் !!!
* இரயில் டிக்கெட், போர்வை, சோப்பு, சீப்பு, செயின், பஞ்சு (காது ப்ராப்ளம் இருந்தால்!) வகையறாக்கள்
* தண்ணீர் --- குடிக்க வாங்கிக் கொள்ளலாம், ஆனால், நெடுந்தூர பயணம் என்றால், இரயிலில் ஏறிய அடுத்த நாள் கழிவரையில் தண்ணீர் வராது. எனவே ...... (பேப்பரே ஓகே என்றால் உங்கள் இஷ்டம் !!!)
* ஆட்டோக்காரருடன் மல்லு கட்ட வேண்டிய (மனித / லக்கேஜ் கட்டணம் ...) சூழ்நிலைக்கான சாத்தியம் அதிகம் இருப்பதால், இரயில் நிலையம் செல்ல சற்று முன்னதாகவே கிளம்பவும் !
* ரொம்ப தாமதமாக கிளம்பினாலும், ஆட்டோக்காரரிடம் இரயில் புறப்படும் நேரத்தைக் கூறி, ஒரு பத்து ரூபாய் எக்ஸ்டிரா தருவதாக கூறி விட்டால், எப்பாடு பட்டாவது உங்களை இரயில் புறப்படும் முன்பாக, நிலையத்தில் சேர்த்து விடுவார், ஆனால், சேரும்வரை அவர் ரோடு மேல் செய்யும் சாகசங்களைக் கண்டு, உங்களுக்கு நாக்கு வெளியே தள்ளி விடும் என்பது ஒரு சின்ன எச்சரிக்கை !!!
* இரயில் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 3 நிமிடங்கள்(!) முன்பாக இரயில் நிலையத்தில் இருப்பது நலம் !!!

இரயில் நிலையத்தில்

* உங்கள் லக்கேஜ் அதிக எடை இருந்தால், இரயில்வே அலுவலர் கண்ணில் படாமல், போர்ட்டரை வைத்து இரண்டு டிரிப் அடித்து, இரயிலில் லக்கேஜை (இருக்கைகளுக்கு கீழே!) நைசாக ஏற்றி விடுங்கள். மாட்டினால், தண்டம் அழ வேண்டி வரும்.
* இரயில் நிலையத்தில் எஸ்கலேட்டரும் கிடையாது, தள்ளுவண்டியும் கிடைக்காது !(போர்ட்டர்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் அவை இருக்கும்!)
* பட்டாஸ் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது !!! TTE யிடம் மாட்டினால், டின் கட்டப்படுவது நிச்சயம் !!!
* தலைவலி மாத்திரை கைவசம் வைத்திருங்கள். ஏதாவது அறுவையான சகபயணி மாட்டினால் உபயோகமாக இருக்கும் !
* நிலையத்தில் ஜாலியாக தம் அடித்து விட்டு, வண்டி புறப்பட்டவுடன், ஓடிப்போய் (ஸ்டைலாக) ஏற முயற்சிக்காதீர்கள் ! வழுக்கி தண்டவாளத்தில் விழுந்தால், சிவலோக பதவி நிச்சயம் !!!
* சரக்கு அடித்து விட்டு இரயிலில் ஏறுங்கள். சரக்கோடு ஏறினால், இரயில்வே போலிஸிடம் மாட்டுவது நிச்சயம் !

இரயிலில்

* இரவு இரயில் என்றால், TTE வருவதற்கு முன்பே, உங்கள் பெர்த்தில் ஏறி தூங்காதீர்கள். அவர் உங்களை எழுப்பி உங்கள் டிக்கெட்டை எப்படியும் பரிசோதிப்பார். கொஞ்சம் கடுப்பும் அடிப்பார் !!!
* இரயிலில் ஏறியவுடன் லுங்கி அல்லது பெர்முடாஸ¤க்கு மாறி விட்டால், வீட்டில் தூங்குவது போலவே தூங்கலாம்.
* உங்கள் லக்கேஜை, நீங்கள் எடுத்துச் சென்ற செயினை (சங்கிலி) வைத்து, இருக்கையுடன் இணைத்து பூட்டி விடுங்கள். இல்லையேல், நிம்மதியாக உறங்க முடியாது.
* நல்ல ஷ¥க்கள் போட்டிருந்தால், அவற்றை பெர்த்தில் தலைக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள் !!! இல்லையேல், அவை லவட்டப்படும்.
* எதுவும் இலவசமாகக் கிடைக்காது ! ஆனால், சில நல்லவர்கள், பிஸ்கட் இலவசமாக தரக்கூடும். அதை வாங்கி சாப்பிட்டால், ஆசுபத்திரியில் தான் கண் முழிக்க நேரிடும் (தலை பாரத்தோடு!)
* வழியில் பழம் தவிர எதையும் வாங்கித் தின்னாதீர்கள். மேலே சொன்னபடி, வயிறு பிடுங்க வாய்ப்பு அதிகம் !
* ஓசிப் பத்திரிகைகள் சகபயணிகளிடம் கிடைக்கும். தாராளமாக வாங்கிப் படியுங்கள் !
* இரயிலில் இருக்கும் டுபாக்கூர் மின்விசிறியை ஓட வைக்க, உங்கள் சீப்பு உபயோகமாக இருக்கும். அது ஏற்படுத்தும் இரைச்சல் கண்டு பயப்படாதீர்கள் !
* கீழ் பெர்த்தில் ஜன்னலை திறந்து வைத்து படுத்திருந்தால், உங்கள் செயின், வாட்ச், ஆகியவற்றுக்கு உத்திரவாதம் கிடையாது.

இறங்குமிடம்

* நீங்கள் இறங்க வேண்டிய இரயில் நிலையம் எப்போது வரும் என்று TTE யிடமோ சகபயணியிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
* பின்னிரவில் தான் நீங்கள் இறங்குமிடம் வருமானால், உஷாராக பார்த்து இறங்கவும். இல்லையெனில், ஏதோ ஒரு ஊருக்கு சென்று பாயை பிராண்ட நேரிடும் !
* டிக்கெட்டை காணவில்லையெனில், கூட்டத்தோடு கூட்டமாக நைசாக நழுவி விடுங்கள். இல்லையெனில், டிராக்கை தாண்டி ஏதாவது குறுக்கு வழியில் வெளியே ஓடி விடுங்கள் !
* நிலையத்தின் வெளியே, மறுபடியும், ஏதோ ஓர் ஆட்டோக்காரருடன் தகராறு செய்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லுங்கள் !


இந்த இடத்தில் உங்கள் முதல் இரயில் பயணம் இனிதே நிறைவடைந்தது... வருக வருக...

* நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான இன்னொரு விஷயம் இருக்கிறது.... இரயில் நாற்றம் எல்லாம் போக குளித்த பிறகு, இந்த பதிவிற்கு மறக்காமல் ஒட்டு போடுங்கள்....

© பாலா (COPYRIGHT BALA)

இதனை பகுதியாகவோ முழுதாகவோ பயன் படுத்த நினைப்போர் செய்ய வேண்டியது :

அ) உங்கள் பயன்பாட்டில் நன்றி என்று பாலா பதிவிற்கு இணைப்பு கொடுங்கள்
ஆ) இந்த பதிவிற்கு ஓட்டு போடுங்கள்.

மீறுபவர்களுக்கு இரயில் பிரயாணச் சூட்டினால் மலச்சிக்கல் வரக்கடவது...

டிஸ்க்ளெய்மர்: இந்த கட்டுரை ஒரு வழிகாட்டி(அல்லது கையேடு) மட்டுமே... இதனால் ஏற்படும் பண, மன உளைச்சல்களுக்கு நான் பொறுப்பல்ல.


******************
இப்பதிவிற்கு அப்போது வந்த பின்னூட்டங்கள்:

Shankar said...
LOL! nice work...

10:28 PM, June 30, 2005
பரி (Pari) said...
ரொம்ப தாமதமாக கிளம்பினாலும், ஆட்டோக்காரரிடம் இரயில் புறப்படும் நேரத்தைக் கூறி, ஒரு பத்து ரூபாய் எக்ஸ்டிரா தருவதாக கூறி விட்டால், எப்பாடு பட்டாவது உங்களை இரயில் புறப்படும் முன்பாக, நிலையத்தில் சேர்த்து விடுவார், ஆனால், சேரும்வரை அவர் ரோடு மேல் செய்யும் சாகசங்களைக் கண்டு, உங்களுக்கு நாக்கு வெளியே தள்ளி விடும் என்பது ஒரு சின்ன எச்சரிக்கை !!!

உங்கள் லக்கேஜ் அதிக எடை இருந்தால், இரயில்வே அலுவலர் கண்ணில் படாமல், போர்ட்டரை வைத்து இரண்டு டிரிப் அடித்து, இரயிலில் லக்கேஜை (இருக்கைகளுக்கு கீழே!) நைசாக ஏற்றி விடுங்கள். மாட்டினால், தண்டம் அழ வேண்டி வரும்.

டிக்கெட்டை காணவில்லையெனில், கூட்டத்தோடு கூட்டமாக நைசாக நழுவி விடுங்கள். இல்லையெனில், டிராக்கை தாண்டி ஏதாவது குறுக்கு வழியில் வெளியே ஓடி விடுங்கள் !
>>>>>
இதுக்கெல்லாம் அந்நியன் வருவான்.

காமெடியா எழுதுனதுக்கான எந்த அறிகுறியும் இல்லாததால ரொம்ப சீரியஸான பதிவு போல இருக்கு.

"சின்ன சின்ன" மேட்டர்தானே இதெல்லாம். பண்ணலாம். தப்பில்ல நடத்துங்க.

10:32 PM, June 30, 2005
முகமூடி said...
நல்ல உபயோகமான பதிவு... ஆனால் இது இந்தியா முழுதும் செல்லும் ரயில் என்பதால் ஒரு விஷயத்தை விட்டு விட்டீர்கள்... வட இந்தியாவில் ரிசர்வ் பெர்த்தாக இருந்தாலும் நீங்கள் பாத்ரூம் சென்று திரும்பி வந்தால் ஒரு வயதான பெரிய உருவம் உங்கள் பர்த்தில் படுத்திருக்கும் (சொத்து வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றப்படும் முன் நெஞ்சு வலி போஸ் கொடுப்பார்களே அந்த மாதிரி ஒரு போஸில்) கால்மாட்டில் ஒருவர் சோகமே உருவாக உட்கார்ந்திருப்பார். அவர்களை எந்த்ரிக்க வைக்க படும் அவஸ்தைகள்...

அப்புறம் ஓசியில் வாங்கி படிக்கும்/படுக்கும் பேப்பரை திருப்பி கொடுக்க வேண்டுமா, வேண்டாமா?

10:46 PM, June 30, 2005
vishytheking said...
oh my god.. this bala and boston bala are two different guys.. sorry mate.. i did not realise that..

ok now back to the topic.. bala thanks for giving the mugamoodi link on the topic.. i had never seenthat blog..

yours is also a good blog..keep it up.

As pari said, its default in Delhi that if you are taking GT to chennai till mathura (around 12 AM) you cannot sleep as weekly commuters will sit in your seats and play cards.. if you ask your right like anniyan, kaise aadmi ho thum (enna aaluyya nee) nu thittuvaanga.

by the way, since i mixed up your identity, i did not invite you to answer my questions.. please feel free to answer them.
http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_112010340546883258.html

thanks and regards

vishy

please remove the ananymous login option. thanks

11:19 PM, June 30, 2005
Boston Bala said...
>>* உங்கள் லக்கேஜ் அதிக எடை இருந்தால், இரயில்வே அலுவலர் கண்ணில் படாமல், போர்ட்டரை வைத்து இரண்டு டிரிப் அடித்து, இரயிலில் லக்கேஜை (இருக்கைகளுக்கு கீழே!) நைசாக ஏற்றி விடுங்கள். மாட்டினால், தண்டம் அழ வேண்டி வரும்.///

Been there; done that :>
Sema experience pola !

1:32 AM, July 01, 2005
கோபி said...
//சரக்கு அடித்து விட்டு இரயிலில் ஏறுங்கள். சரக்கோடு ஏறினால், இரயில்வே போலிஸிடம் மாட்டுவது நிச்சயம் !//

ரெகுலரா சரக்கடிக்கிற ஒருத்தர் சொன்ன அட்வைஸ் "வாட்டரோட வோட்கா, கோக்ல விஸ்கி, ரெண்டும் கலந்தா ஒன்னுமே வெளிய தெரியாது"

3:03 PM, July 01, 2005
வீ. எம் said...
// இட்லி, சப்பாத்தி என்று வகையாக (சீக்கிரம் ஊசிப் போகாத அயிட்டங்களாக!) //
பாலா ,
இல்லயே , நான் ஊசி எடுத்து இட்லி, சப்பாத்தி ல குத்தி பார்த்தேன் , நல்லா போகுதே.. அப்புறம் எப்படி இதை ஊசிப்போகத அயிட்டம்னு சொன்னீங்க??? ஹி ஹி ஹி

///உங்கள் லக்கேஜின் எடை பற்றியெல்லாம் கவலை வேண்டாம் (உங்களால் அதை தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா என்பது தவிர !!!)//
அதே போல தூக்கி மேலே வைக்கும் போது கை தவறி யார் தலையில் விழுந்தால் அவருக்கு பலமாக அடி படாதவரை எடை இருந்தால் நலம்

அப்புறம் பாலா,முக்கியமான ஒரு மேட்டரை விட்டுட்டீங்க.. ரொம்ப முக்கியம் , அதுவும் முதல்ல செய்ய வேண்டியது மிஸ் பன்னிட்டீங்களே!!
வீ எம்

8:24 PM, July 04, 2005
மாயவரத்தான்... said...
த்தோடா... நம்ம 'முதல் பஸ் பயணத்துக்கு வழிகாட்டி'(http://mayavarathaan.blogspot.com/2005/05/blog-post_19.html")யை விட இது நல்லாருக்கே!

9:52 PM, July 04, 2005
enRenRum-anbudan.BALA said...
nanRi, VM & mayavarathaan !!!

//அப்புறம் பாலா,முக்கியமான ஒரு மேட்டரை விட்டுட்டீங்க.. ரொம்ப முக்கியம் , அதுவும் முதல்ல செய்ய வேண்டியது மிஸ் பன்னிட்டீங்களே!!
//
puriyalaiyE, appu !!!

10:33 AM, July 05, 2005
வீ. எம் said...
சரி, பாலா ஒரு க்ளு தரேன்..

ரயில் நிலையம் போன ஒடனே.. நம்ம கோச் (coach) ரிசர்வேஷன் சார்ட்ல ஒன்னு பார்க்கனும் !
வீ எம்

6:22 PM, July 05, 2005
enRenRum-anbudan.BALA said...
V.M,
//ரயில் நிலையம் போன ஒடனே.. நம்ம கோச் (coach) ரிசர்வேஷன் சார்ட்ல ஒன்னு பார்க்கனும் !
//

suththamA puriyalE, boss :-(

It is unfortunate that people like kuzali and LLDas are leaving Tamil blogs !!!

1:58 PM, July 07, 2005
Voice on Wings said...
//ரயில் நிலையம் போன ஒடனே.. நம்ம கோச் (coach) ரிசர்வேஷன் சார்ட்ல ஒன்னு பார்க்கனும் !
வீ எம்
//

:) sariyAna joLLu party :)

4:18 PM, July 07, 2005
வீ. எம் said...
அங்க பாருங்க voice on wings கண்டுபிடிச்சுட்டார்.. பாம்பின் கால் பாம்பறியும் னு இதை தான் சொல்லுவாங்களா??

// It is unfortunate that people like kuzali and LLDas are leaving Tamil blogs !!! //
Not leaving, taking a short break. but still it is unfortunate . hope they will come back soon

அப்புறம் பாலா , என் கடைசி பதிவுல உங்க கருத்து இல்லையே.. ? என் blog ku leave விட்டுடீங்களா?? :)

வீ எம்

5:02 PM, July 07, 2005
enRenRum-anbudan.BALA said...
இள ரத்தங்கள் எல்லாம் சம்ம ஷார்ப்பா இருக்கீங்க :) நாம தான், கொஞ்சம் வெண்குழலா ஆயிட்டோ ம் :-(
VM, ஒங்க லேட்டஸ்ட் பதிவை இப்ப தான் பார்த்தேன் ! கமெண்ட் போட்டிருக்கிறேன் ! பாருங்க !
என்றென்றும் அன்புடன்
பாலா

5:20 PM, July 07, 2005
Suresh said...
Good one. But the people who read this may not really would travel in train considering the advent of low cost airlines!!!!

9:23 AM, July 08, 2005


எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

Friday, November 30, 2007

372. டாடா நிறுவனத்தின் ஒரு லட்ச ரூபாய் கார்

இது சீக்கிரமே மார்கெட்டுக்கு வந்து விடும் என்று நம்பப்படுகிறது. குறைந்த விலையில் மிக அழகான டிசைனுடன் கூடிய காரைப் பார்த்தாலேலே, வாங்குவதற்கு ஆசை வந்து விடும் :)

Photo Sharing and Video Hosting at Photobucket

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, April 28, 2007

339. Corporate Cartoons!

Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket

Wednesday, November 08, 2006

ஜெ வீட்டில் நுழைந்த மர்ம நபர்

இட்லி வடையாரை முந்திக் கொண்டு ஒரு அரசியல் செய்தியை தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

சற்று முன் மக்கள் டிவியில் கேட்ட ஒரு செய்தி:

முன்னாள் முதல்வர் ஜெ வீட்டுக்குள், வாயிலில் இருந்த காவலரை கத்தியை காட்டி மிரட்டி, ஒரு மர்ம நபர் நுழைந்துள்ளார். பின்னர் அவரை, இன்னும் சிலருடன் சேர்ந்து கொண்டு காவலர் பிடிக்க முயற்சித்தபோது, அதே கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பித்து ஓடி விட்டார் !!! பின்னர், எப்பொழுதும் போல, போலீஸ் வலை வீசித் தேடி அந்த மர்ம நபரை தேடிப் பிடித்து கைது செய்து விட்டனர். அவரை ஆழ்வார்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயின் வக்கீல், முன்னாள் முதல்வருக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டதே, இந்த சம்பவத்திற்குக் காரணம் என்று நிருபர்களிடம் கூறினார். மேல் விவரங்களை "இட்லி வடை" நாளை தருவார் என்று எதிர்பார்க்கிறேன்.

எ.அ.பாலா

$$$ 256 $$$

Saturday, November 04, 2006

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க - 10

இல்லறம் = நல்லறம்
****************

ஒரு தம்பதி சற்று முன் அவர்களுக்கிடையே நடந்தேறியிருந்த சண்டைக்குப் பின்னர், காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். இருவருமே தங்கள் பக்கமே நியாயம் இருப்பதாக பிடிவாதமாக நம்பியதால் வெகு நேரம் ஒருவருடன் ஒருவர் பேசவில்லை. சாலையோரத்தில் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த சில ஆடுகளையும், பன்றிகளையும் பார்த்த கணவன், மனைவியிடம் நக்கலாக, 'உன் உறவினரோ?' என்று வினவ, மனைவி ஆத்திரப்படாமல், "ஆம், என் மாமியார் குடும்பத்தினர் !" என்றார் :)

கேள்வியின் நாயகனே
*****************

ஒரு கணவர் ஒரு நாளில் ஆண்களை விட இரு மடங்கு சொற்களை பெண்டிர் பேச்சில் உபயோகிப்பதாக ஓர் ஆய்வுக்கட்டுரையில் எழுதப்பட்டிருப்பதாகக் கூறினார். உடனே, மனைவி, "அதற்குக் காரணம், பெண்கள் தாங்கள் ஆண்களிடம் ஒரு முறை கூறுவதை, திரும்பவும் கூற வேண்டியிருப்பதே!" என்று சொல்ல, கணவர் வினவினார், " என்ன?"

படைப்பின் ரகசியம்
***************

ஒரு கணவர் தன் மனைவியிடம், "ஒரே சமயத்தில், நீ மிக அழகாகவும், அதி முட்டாளாகவும் காணப்படுவது எப்படி என்பது எனக்குப் புரியவில்லை !" என்றதற்கு பதிலாக, மனைவி, "நான் விளக்குகிறேன் ! கடவுள் என்னை அழகாகப் படைத்தது, நான் உங்களைக் கவரவே, அதே நேரம், என்னை முட்டாளாக ஆக்கியது, நான் உங்களால் கவரப்படுவதற்காகவே !" என்றவுடன், கணவர் கப்சிப் :)

எஅ.பாலா

### 254 ###

Sunday, October 15, 2006

சில கார்ட்டூன்கள்

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Tuesday, October 10, 2006

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க - 9வது பதிவு

மெயிலில் வந்த ஆங்கில மேட்டரை மொழி பெயர்த்திருக்கிறேன். என்சாய் !

தந்தைக்கு ஓர் மடல் !
****************

ஒரு தந்தை தன் டீன்ஏஜ் மகளின் அறைப்பக்கம் சென்றபோது, அறை மிக சுத்தமாகவும், பொருட்கள் இருக்க
வேண்டிய இடத்தில் இருப்பதையும் பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்து, அறையில் நுழைந்தவர், படுக்கையில்
தலையணையின் மேல் "என் அன்புள்ள அப்பாவுக்கு" என்று எழுதியிருந்த ஒரு கடிதத்தை கண்டு துணுக்குற்று,
'ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது' என்ற பயத்தில் கடிதத்தைப் பிரித்துப் படிக்கத்
தொடங்கினார்.

என் அன்புள்ள அப்பா,

மிகுந்த மன வருத்தத்துடன், இதை எழுதுகிறேன். நான் வீட்டை விட்டுப் போகிறேன். இப்படி
சொல்லாமல் கொள்ளாமல், என் புதிய காதலன் கமலேஷ¤டன் நான் ஓடிப் போவதற்குக் காரணம், உங்களுடனும்,
அம்மாவுடனும் ஓர் அனாவசிய சண்டையைத் தவிர்க்கவே. கமலேஷ் என் மேல் மிகுந்த ஆசை வைத்துள்ளார்.
எனக்கும் அவர் மேல் கொள்ளை ஆசை ! கமலேஷ் உடலெங்கும் துளையிட்டு ஆபரணங்கள் அணிந்தும், பச்சை
குத்தியும், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் போல் உடை அணிந்தும் காணப்பட்டாலும் நீங்கள் அவரைச்
சந்தித்தால், நிச்சயம் அவரை விரும்புவீர்கள் !!!

இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும், நான் கர்ப்பமாக இருக்கிறேன். கமலேஷ், நான் குழந்தை
பெற்றுக் கொள்வதையும், நாங்கள் சேர்ந்து சந்தோஷமாய் வாழ்வதையும் மிகவும் எதிர்பார்க்கிறார்.
கமலேஷ¤க்கும் எனக்கும் அதிக வயது வித்தியாசம் (45 எல்லாம் இக்காலத்தில் ஒரு வயதா என்ன ?)
இருந்தாலும், அவர் ஏழையாக இருந்தாலும், எனக்குக் கவலையில்லை. தூய காதலுக்கு நடுவில் இவையெல்லாம் துச்சம்
என்பது என் எண்ணம். நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்கள் தானே ???

கமலேஷிடம் பல நல்ல இசை ஆல்பங்கள் உள்ளன. காட்டின் நடுவே, தனிமையான சூழலில், ஒரு அழகான
இடத்தில் அவர் வாழ்கிறார். கமலேஷ¤க்கு என்னைத் தவிர இன்னும் சில பெண்களுடன் தொடர்பு
இருந்தாலும், அது குறித்து எனக்குக் கவலையில்லை. அவருக்குத் தெரிந்த விதத்தில், அவர் என்னிடம்
விசுவாசமாக இருப்பார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! நான் நிறைய குழந்தைகள் அவருக்கு பெற்றுத் தர வேண்டும்
என்பது அவர் ஆசை, என் கனவும் அதுவே.

மரிஜுவானா எவ்வளவு அற்புதமான விஷயம் என்பதை எனக்கு கற்றுத் தந்தவர் கமலேஷ் தான். கஞ்சா
வழங்கும் பேருவகையை எனக்கு அறிமுகம் செய்தவரும் அவரே ! நாங்கள் தினமும் பிரார்த்தனை செய்வோம்,
எய்ட்ஸை குணப்படுத்த மருந்து சீக்கிரம் கண்டு பிடிக்கப்பட வேண்டும் என்று, அது நடந்தால், கமலேஷின்
உடல் நலமும் கொஞ்சம் கொஞ்சமாக தேறும் அல்லவா ???

என்னைப் பற்றி கவலைப்பட்டு உங்கள் உடல்நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். எனக்கு இப்போது 15
வயது, நல்லது கெட்டதும், என்னை கவனித்துக் கொள்ளவும், எனக்குத் தெரியும் !!! ஒரு நாள் நாங்கள்
உங்களை சந்திக்க திரும்பி வருவோம், உங்கள் பேரக் குழந்தைகளைப் பார்க்க உங்களுக்கு மட்டும் ஆசை
இருக்காதா என்ன ?

உங்கள் அன்பு மகள்,
அனிதா
**********************************

கடிதத்தில் முடிவில், 'மறுபக்கம் பார்க்கவும்" என்று எழுதியிருந்ததைப் பார்த்த தந்தையார், இன்னும்
என்ன குண்டை தலையில் போடப் போகிறாளோ என்ற அதிர்ச்சியில், கைகள் நடுங்க, கடிதத்தைத்
திருப்பி வாசித்தார்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பின் குறிப்பு: நான் மேலே எழுதிய எதுவும் உண்மையில்லை ! நான் பக்கத்து வீட்டில் இருக்கிறேன்.
என் மேசையின் நடு டிராயரில் இருக்கும் என் ரிப்போர்ட் கார்ட் மதிப்பெண்களை விடவும்,
வாழ்க்கையில் பல மோசமான விஷயங்கள் உள்ளன என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்பினேன். கார்டில்
கையெழுத்திட்டு விட்டு, நான் நம் வீட்டுக்கு வர எது பாதுகாப்பான சமயம் என்பதை தொலைபேசவும் ! ஐ
லவ் யூ, அப்பா :)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 242 ***

Saturday, July 15, 2006

சூடு தணிச்சு யோசிங்க, சிரிங்க !

முகமூடியின் இந்தப் பதிவை வாசித்து, Calgary சிவாவின் வேண்டுகோளுக்கு செவி மடுத்ததின் விளைவாக, விளைந்தது இந்த தமிழாக்கப் பதிவு ! ஆங்கில மூலத்திற்கு முகமூடியின் பதிவைப் பார்க்கவும் ! இப்படி லிங்க் தருவதன் மூலம் முகமூடிக்கும் நிறைய வாசகர்கள் கிடைப்பார்கள் இல்லையா ;-)


1. மெளனத்தை மேம்படுத்த வழியின்றிப் பேசாதே !

2. தவளைகள் தங்களை "BUG" செய்பவற்றை, எளிமையாகத் தின்று விடுகின்றன !

3. முட்டாள்தனம் ஒரு குறையல்ல ! வேறெங்காவது செல் !

4. சில நேரங்களில் நீ பூச்சி, சில நேரங்களில் நீ காற்றுத் தடுப்பான் (Windshield) !!!

5. உனக்கு உதவி செய்ய விருப்பம். எப்படி நீ உள்ளே நுழைந்தாய் ???

6. உன்னிடம் ஒன்று இருப்பதினாலேயே, அந்த ஒன்று இருப்பது போல் நீ நடந்து கொள்ளத் தேவையில்லை !

7. நான் "எவரும் இல்லை", அப்பழுக்கற்றவர் "எவரும் இல்லை", எனவே நான் அப்பழுக்கற்றவன் ! என்ன ஏதாவது புரியுதா :)

8. பாக்டீரியாவுக்கு ஆதரவு அளியுங்கள், சில மனிதர்கள் அதன் "Culture" க்கு மட்டுமே தகுதியானவர்கள் !

9. "எண்ணம்" என்று வரும்போது, சிலர் எங்கேயும், எதிலும் நிறுத்துவதில்லை !

10. அறிவுஜீவி: நீங்கள் மதிப்பு தராத பலப் பல விஷயங்கள் குறித்து அறிந்து வைத்திருப்பவர்

11. "இல்லை" என்பதன் எந்தப் பகுதி உனக்கு விளங்கவில்லை ?

12. பன்றியுடன் மல்லுக் கட்டாதே ! நீங்கள் இருவருமே அசுத்தப்படுவீர்கள், ஆனால் பன்றிக்கு அதில் கொண்டாட்டமே :)

13. ஓரணியாக செயல்படுவது மிக அவசியம் -- இன்னொருவர் மேல் பழி போட அது அனுமதிப்பதால் !

14. சரியாக இலக்கை நோக்கிச் சுட வேண்டுமெனில், முதலில் சுடு, பின்னர் சுட்ட இடத்தை இலக்கு என்று கூறு !

15. நான் ஒரு நாளைக்கு ஒருவரை மட்டுமே மகிழ்விப்பேன். ஆனால், இன்று உன் நாளில்லை, நாளையும் தோதாகத் தோன்றவில்லை !!!

16. எலிப் பந்தயத்தில் (Rat-Race) பிரச்சினை என்னவென்றால், அதில் நீ வென்றாலும், நீ எலியாகவே கருதப்படுவாய் !

நன்றி: நண்பர் முகமூடி அவர்கள் !

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, July 14, 2006

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க --- 8-வது பதிவு

1. வாழ்க்கை எனும் ஓடம், வழங்குகின்ற பாடம் !

நடு இரவில் கண் விழித்த ஒரு பெண்மணி தன் கணவர் அருகில் இல்லாதது கண்டு அவரை வீட்டில் தேடியபோது, கணவர் சமையலறையில் காபி அருந்திக் கொண்டிருப்பதை பார்த்தார். கணவர் சுவற்றை வெறித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல் தோன்றினார். அவர் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார். துணுக்குற்ற மனைவி, "என்ன ஆச்சு, டார்லிங் ? இந்நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?" என்று வினவினார். கணவர், மனைவியை நிமிர்ந்து பார்த்து, "20 வருடங்களுக்கு முன் நாமிருவரும் காதல் வயப்பட்டது உனக்கு ஞாபகம் இருக்கிறதா ? அப்போது உனக்கு 16 வயது தான் !". மனைவி, "நன்றாக நினைவிருக்கிறது" என்றார்.

இருவருக்குமிடையே சிறிய மௌனம் நிலவியது ! கணவரின் குரலில் ஏற்பட்ட தடுமாற்றத்தால், வார்த்தைகள் மெல்ல மெல்ல வெளிவந்தன, "உன்னுடைய அப்பாவிடம் நாம் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் (மனைவியின் முகத்தில் இப்போது வெட்கம்!) மாட்டிக் கொண்டதும், முன்கோபியான அவர், நான் உடனே உன்னை திருமணம் செய்யாவிடில் என்னை 20 வருடங்கள் சிறையில் அடைக்க சட்டத்தில் வழி இருக்கிறது என்று துப்பாக்கி காட்டி மிரட்டியதும் உனக்கு நினைவிருக்கிறதா ?" என்று கேட்டதும், மனைவி மிக மென்மையாக, "ஆமாம், செல்லம், ஞாபகம் வருகிறது" என்று பதிலுரைத்தார். கணவர் கண்களை துடைத்துக் கொண்டே, "இன்று நான் விடுதலை அடைந்திருப்பேன் !!!" என்று மிக்க கழிவிரக்கத்துடன் கூறினார் :)

2. வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் !

ஒரு கணவர் அலுவலகத்திலிருந்து தனது மனைவியை தொலைபேசியில் அழைத்து, "டார்லிங், நான் எனது மேலாளருடனும், அவருடைய நண்பர்களுடனும், கனடாவிற்கு ஒரு வார காலம் மீன் பிடி சுற்றுலா செல்ல வேண்டியுள்ளது ! நான் எதிர்பார்க்கும் பணி உயர்வைப் பெற இது ஒரு நல்ல வாய்ப்பாக நிச்சயம் அமையும் ! பயணத்துக்குத் தேவையான துணிமணிகளையும், மீன்பிடி உபகரணப் பெட்டியையும் தயாராக எடுத்து வை. அலுவலகத்திலிருந்தே கிளம்ப வேண்டியிருப்பதால், செல்லும் வழியில், அவற்றை எடுத்துக் கொள்கிறேன். ஓ, ஒன்றை மறந்து விட்டேன். எனது நீல நிற பைஜாமாவை மறக்காமல் எடுத்து வை" என்று கூறினார்.

மனைவியும் பரபரப்பாக செயல்பட்டு, கணவரின் பயணத்திற்குத் தேவையான அனைத்தையும் பேக் செய்து அவரை ஊருக்கு அனுப்பி வைத்தார். ஒரு வாரம் கழித்து திரும்பிய கணவர், சற்று அயற்சியாகத் தெரிந்தாலும், உற்சாகமாகவே காணப்பட்டார். "என்ன, நிறைய மீன் பிடித்தீர்களா ?" என்று கேட்ட மனைவியிடம், கணவர், "ஆமாம், நிறையவே, வால மீன், விலாங்கு மீன், வஜ்ரம், விரால் -னுட்டு நிறையவே ! ஆனால், ஏன் நீ நான் கேட்ட நீல நிற பைஜாமாவை எடுத்து வைக்கல ? மறந்துட்டியா ?" என்றார். உடனே மனைவி, "இல்லையே, எடுத்து வைத்தேனே, உங்களுடைய மீன்பிடி உபகரணப் பெட்டியில் வைத்திருந்தேன் !!!" என்றவுடன், கணவர் எஸ்கேப் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, March 12, 2006

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க --- 7-வது பதிவு

1. மேலாளர் vs பொறியாளர்

மேலாளர்கள் அடங்கிய ஒரு குழுவுக்கு ஒரு கொடிக்கம்பத்தின் உயரத்தை அளக்கும் பணி தரப்பட்டது. உடனே, அம்மேலாளர்கள் ஏணிகளையும், அளவு நாடாக்களையும் எடுத்துக் கொண்டு கொடிக்கம்பத்திற்கு விரைந்தனர்! அவர்கள் ஏணிகளில் ஏறி விழுவதும்,அளவு நாடாக்களை நழுவ விடுவதும் என்று அந்த இடத்தையே களேயபரம் செய்த வண்ணம் இருந்தனர் !

அப்போது அப்பக்கம் வந்த ஒரு இளம் பொறியாளர், அம்மேலாளர்கள் எதற்காக முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு, அந்த கொடிக்கம்பத்தை நிலத்திலிருந்து பெயர்த்தெடுத்து, அதை படுத்த வாக்கில் நிலத்திலிட்டு அளவெடுத்து, அளவை மேலாளர் ஒருவரிடம் கூறினார்.

அவ்விடத்தை விட்டு அப்பொறியாளர் அகன்றவுடன், மேலாளர்களில் ஒருவர், இன்னொருவரைப் பார்த்து சிரித்தபடி கூறினார், "இப்படித் தான் பொறியாளர்கள் வேலை செய்கிறார்கள் ! நாம் உயரத்தை அளக்கக் கேட்டால், அவர்கள் நீளத்தை அளந்து தருவார்கள்" !!!!!

மேலே சொன்ன குட்டிக் கதையின் நீதி என்ன ???
***************************************************

2. வேறுபடும் கருத்துப் பரிமாற்றத் திறன் !

ஒரு ப்ராஜெக்ட் குறித்து மென்பொருளாளர் தன் ப்ராஜெக்ட் லீடரிடம்:

இந்த ப்ராஜெக்டை நம்மால் செய்யவே இயலாது ! தற்போதுள்ள டிசைனில் பெரிய மாற்றம் செய்ய வேண்டுவதோடு, இந்த பழமையான சிஸ்டம் குறித்த அறிவு நம் அணியில் ஒருவருக்கும் கிடையாது ! மேலும், அந்த சிஸ்டம் எழுதப்பட்ட கணினி மொழியில் நம்மில் யாருக்கும் பயிற்சி கிடையாது. இது போன்ற ப்ராஜெக்டை நம் நிறுவனம் ஏற்கவே கூடாது என்பதே என் கருத்து !

ப்ராஜெக்ட் லீடர் தன் மேலாளரிடம்:

இந்த ப்ராஜெக்டில் ஒரு டிசைன் மாற்றம் தேவைப்படுகிறது. இம்மாதிரி வேலைகளில் நம் அணியினர் எவருக்கும் அனுபவம் இல்லை. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கணினி மொழி குறித்து அணியினருக்கு பயிற்சி தருவது அவசியமாகிறது! இந்த ப்ராஜெக்டை மேற்கொள்ள நாம் தற்போது தயாராக இல்லை என்பதே என் கருத்து !

மேலாளர் முதல் நிலை மேலாளரிடம்:

இந்த ப்ராஜெக்டில் ஒரு டிசைன் மாற்றம் தேவைப்படுவதோடு, இம்மாதிரி வேலைகளில் நமக்கு அனுபவம் குறைவு! நம் நிறுவனத்தில் இந்த ப்ராஜெக்ட் வேலையை எடுத்துச் செய்ய வல்ல, சரியாக பயிற்றுவிக்கப்பட்ட ஆட்கள் அதிகம் இல்லை! இந்த ப்ராஜெக்டை நம்மால் செய்ய இயலும், ஆனால் கால அவகாசம் சற்று அதிகம் தேவைப்படும் என்பதே என் கருத்து !!!

முதல் நிலை மேலாளர் சீனியர் மேலாளரிடம்:

இந்த ப்ராஜெக்ட் வேலை ஒரு டிசைன் மறுவடிவமைப்பு குறித்தது! இம்மாதிரி வேலைகளைச் செய்ய நம் நிறுவனத்தில் சிலர் உள்ளனர், இன்னும் சிலருக்கு, இதற்குத் தேவையான கணினி மொழி குறித்த அனுபவம் உள்ளது. இவர்கள், பிறருக்கு பயிற்சி அளிக்க முடியும்! இந்த ப்ராஜெக்டை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும், சற்று எச்சரிக்கையோடு, என்பதே என் கருத்து!

சீனியர் மேலாளர் நிறுவன முதல்வரிடம்:

இந்த ப்ராஜெக்ட், இது போன்ற டிசைன் மறுவடிவமைப்பில் ஏற்படும் தொழில் நுட்ப சவால்களை எதிர்கொள்ள வல்ல, நமது நிறுவனத்தின் திறனை, நமது போட்டியாளர்களுக்கும், பிறருக்கும் பறைசாற்றும்! இதற்கு வேண்டிய திறன்களும், இதை வெற்றிகரமாக செயல்படுத்தக் கூடிய ஆட்களும் நம்மிடம் உள்ளனர்! நம்மில் அனுபவமிக்க சிலர், இந்த ப்ராஜெக்ட் வேலைக்குத் தேவையான பயிற்சியை, இன்னும் பலருக்கு, ஏற்கனவே அளித்து விட்டனர்! எனவே, இம்மாதிரி ப்ராஜெக்ட் நம் கையை விட்டு நழுவ நாம் கண்டிப்பாக விடக் கூடாது என்பதே என் கருத்து !!!!!


நிறுவன முதல்வர் வாடிக்கையாளரிடம்:

எங்கள் நிறுவனம், இது போன்ற ப்ராஜெக்ட்களை பல பெரிய வாடிக்கையாளர்களுக்கு பல முறை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது! இம்மாதிரி சவாலான வேலைக்கு எங்கள் நிறுவனத்தை நீங்கள் தேர்ந்தெடுப்பது மிகச் சரியான முடிவாக இருக்கும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்! இந்த ப்ராஜெக்டை, நீங்கள் கேட்கும் காலக்கெடுவுக்குள் நாங்கள் இந்த ப்ராஜெக்டை வெற்றிகரமாக செய்து முடிப்போம் என்பதே என் கருத்து !!!!!


என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, August 17, 2005

The BOSS !

ஆதியில் மனித உடல் உருவாக்கப்பட்டபோது, உடலின் எல்லா அங்கங்களும் தாமே உடலின் தலைவராக (BOSS) இருக்க விரும்பின.

மூளை, "உடலின் அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்துவதால், நானே பாஸ்!" என்றது. உடனே பாதங்கள், "நாங்கள் தான் அந்த மூளையையே சுமந்து, அது விரும்பும் இடத்துக்கு இட்டுச் செல்கிறோம். எனவே நாங்களே பாஸ்!" என்றன.

உடனே கைகள், "நாங்கள் வேலை செய்து பணம் ஈட்டுவதால், எங்களுக்கே பாஸ் ஆவதற்குரிய தகுதி உள்ளது!" என்று கூறின. அதைத் தொடர்ந்து, இதயம், நுரையீரல், கண்கள் என்று பல அங்கங்களும், தாங்களே பாஸ் ஆவதற்குரிய தகுதி உடையவை என்று கூற, சச்சரவு வலுத்தது.

இறுதியாக, ஆசனவாயில் (ஆ.வா), " ஏன், நான் பாஸ் ஆகக் கூடாதா?" என்றவுடன் மற்ற அங்கங்கள் இடிஇடியென சிரித்து, அதை ஏளனம் செய்தன !!! கடுப்பான ஆ.வா தன்னை இறுக மூடிக்கொண்டு வேலை நிறுத்தத்தில் இறங்கியது !

ஒரு சில நாட்களில், அதன் விளைவாக, கண்கள் பாரமாகி, கைகால்கள் தடுமாறி, இதயமும், நுரையீரலும், மூளையும் பாதிக்கப்பட்டு, உடல் பெரும் அவதிக்கு உள்ளானது. முடிவில், மற்ற அங்கங்கள் ஆலோசனை செய்து, ஆ.வா வுக்கு பாஸ் பதவியை தந்து விட இசைந்தன.

அன்றிலிருந்து, மற்ற அங்கங்கள் தங்களுக்குரிய பணியை சரிவர இடைவிடாமல் செய்ய, தலைவராகிய பாஸ் (என்பவர்!) ஓரிடத்தில் அமர்ந்தபடி, கழிவை வெளியேற்றுவதை மட்டும் செய்து வருகிறார் !!!

Friday, July 08, 2005

படமும் நகைச்சுவையும் - 2













பி.கு: முதல் படம் நிச்சயமாக அன்புமணி அவர்களுக்கு பிடிக்காது !!!

Sunday, June 26, 2005

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க --- 6-வது பதிவு

1. தொழில் நுட்பத்தின் உச்சம் !

ஒரு முறை, ஒரு அமெரிக்கர், ஒரு ஜப்பானியர் மற்றும் ஒரு சர்தார் ஒரு பொழுதுபோக்கு நிலையத்தில் (Recreation club !) அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென ஒரு 'பீப்,பீப்' ஒலி எழும்பியது. உடனே அந்த அமெரிக்கர் தன் மணிக்கட்டை அழுத்த அந்த ஒலி நின்றது! அவர், "என் பேஜர் எழுப்பிய ஒலி தான் அது. என் மணிக்கட்டின் தோலுக்குக் கீழே ஒரு மைக்ரோ சிப் பதிக்கப்பட்டுள்ளது!" என்று பெருமிதப்பட்டார் !

சில நிமிடங்களுக்குப் பின், ஒரு தொலைபேசி மணியொலி கேட்டது. உடனே அந்த ஜப்பானியர் தன் வெறும் உள்ளங்கையை காதுக்கு அருகே வைத்துப் பேசிவிட்டு பின்னர் பெருமை பொங்க, "அது எனது செல்·போன். அதற்காக, என் உள்ளங்கையில் ஒரு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது!" என்று கூறியவுடன் நமது சர்தாருக்கு அவரது தொழில்நுட்பக் கீழ்நிலை குறித்து மிக்க மனவருத்தம் ஏற்பட்டது.

சர்தாருக்கு கழிவறை செல்ல வேண்டியிருந்ததால், அவ்விடத்திலிருந்து அகன்றார். அங்கிருந்து திரும்பியவுடன், அவரது பின்புறத்தில் கழிவறைக் காகிதம் தொங்கிக் கொண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை. மற்ற இருவரும், "என்ன இது ?" என்று கிண்டலாக கேட்டனர்.

உடனே நமது புத்திசாலி சர்தார், சமயோஜிதமாக, "ஓ, அதுவா ? எனக்கு ·பேக்ஸில் (FAX) தகவல் வந்திருக்கிறது!!!" என்று ஒரு போடு போட்டார் !!!!!!!!!! மற்ற இருவரும் வாயடைத்து நின்றனர்.

2. நரகமும் தொலைத் தொடர்பும் !


ஒரு அரசியல்வாதி, ஒரு திருடன் மற்றும் ஒரு மென்பொருளாளர் ஆகியோர் இறந்தவுடன், நரகத்திற்கு சென்றனர். அரசியல்வாதி, "எந்நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது என்று அறிய தொலைபேச விரும்புகிறேன்" என்று கூறி, தொலைபேசியில் 5 நிமிடங்கள் பேசி விட்டு, நரகத்திலிருந்த சாத்தானைப் பார்த்து, "நான் பேசியதற்கு கட்டணம் எவ்வளவு?" என்றவுடன், சாத்தான், "5 லட்சம் ரூபாய்" என்றது ! அவர் பதில் பேசாமல் ஒரு செக் எழுதிக் கொடுத்தார் !

அடுத்து, அந்தத் திருடன் தன் சகாக்களுடன் தான் பேச விரும்புவதாகக் கூறி, தொலைபேசியில் 2 நிமிடங்கள் பேசினான். "எவ்வளவு தர வேண்டும்?" என்றதற்கு சாத்தான், "10 லட்சம் ரூபாய்!" என்றவுடன், திருடன் கடுப்புடன் 10 லட்சத்திற்கு செக் கொடுத்தான் !

அந்த மென்பொருளாளன், "நானும் எனது தகவல் தொழில் நுட்பத் துறை நண்பர்களுடன் அளவளாவ ஆசைப்படுகிறேன்" என்று சாத்தானிடம் சொல்லி விட்டு, தொலைபேசியில், தொழில்நுட்பம், பிராஜெக்ட் மற்றும் மேலாளர்கள் குறித்து தொடர்ந்து 20 மணி நேரம் கதைத்து விட்டு, சாத்தானிடம் அலட்சியமாக, "எவ்வளவு கட்டணம்?" என்றான்.

சாத்தான், "நானூறு ரூபாய்!" என்றவுடன் அதிர்ந்து போன அப்பொறியாளன், "என்ன, நானூறு ரூபாய் தானா!!!" என்றவுடன் சாத்தான், "ஒரு நரகத்திலிருந்து இன்னொரு நரகத்திற்கு தொலைபேசினால் அது உள்ளூர் அழைப்பு (LOCAL CALL) தான்!!!" என்றது !!!!!!!!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, April 23, 2005

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க - 5

1. துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை!

இரு பாகிஸ்தானியர்கள் வாஷிங்டனிலிருந்து நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறி, ஒருவர் ஜன்னலை ஒட்டிய இருக்கையிலும், இன்னொருவர் நடு இருக்கையிலும் அமர்ந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஒரு பருமனான சர்தாஜி அந்த பாகிஸ்தானியர்கள் பக்கத்தில் இருந்த (நடையை ஒட்டிய) இருக்கையில் அமர்ந்தார்!

அமர்ந்தவுடன், தன் கால்களை சற்று இளைப்பாற்ற காலணிகளை களைந்தவுடன், ஜன்னலருகில் அமர்ந்திருந்த பாகிஸ்தானி, "நான் சென்று ஒரு கோக் எடுத்து வருகிறேன்" என்றார். உடனே நல்ல மனம் கொண்ட நம் சர்தார்ஜி, "நீங்கள் இருங்கள், நான் போய் எடுத்து வருகிறேன்!" என்று கூறி காலுறைகளுடன் நடந்து சென்றார்.

சர்தார் சென்றவுடன், அந்த பாகிஸ்தானி, சர்தாரின் காலணிக்குள் எச்சில் துப்பி, வைத்து விட்டார். சர்தார் கோக்குடன் வந்தவுடன், இன்னொரு பாகிஸ்தானி, "எனக்கும் கோக் அருந்த வேண்டும் போலுள்ளது" என்றவுடன், சர்தார் தயாள மனதுடன், "கவலைப்படாதீர்கள்! நான் போய் உங்களுக்கும் ஒன்று எடுத்து வருகிறேன்!" என்று மறுபடியும் சென்றார். அந்த நேரத்தில், அதே பாகிஸ்தானி இப்போது சர்தாரின் மற்றொரு காலணியிலும் எச்சில் துப்பி வைத்து விட்டார்!!!

சிறிது நேரத்தில், விமானம் தரை இறங்கத் தொடங்கியது. சர்தார் காலணிகளுக்குள் தன் கால்களை நுழைத்தவுடன், நடந்த நிகழ்வை யூகித்து புரிந்து கொண்டு விட்டார்!!! மிகுந்த வேதனையுடனும் மனவலியுடனும், பாகிஸ்தானியர்களை பார்த்து கூறினர் " இன்னும் எவ்வளவு நாள் இவை நீடிக்க வேண்டும்! நம்மிடையே நிலவும் இந்தப் பகை ... வெறுப்புணர்வு ... தீங்கு செய்ய நினைக்கும் மனோபாவம் ... காலணிகளுக்குள் எச்சில் துப்புதல், கோக்கில் சிறுநீர் கழித்தல் !!!!!!"


2. முத்தமும் சத்தமும்!

ஒரு பாகிஸ்தானி, ஒரு சர்தாஜி, ஒரு அழகான இளம்பெண் ஆகிய மூவரும் ரயிலில் ஒரு முறை பயணம் செய்தனர். ரயில் ஒரு குகையினூடே பயணித்துக் கொண்டிருந்த இருட்டு வேளையில், முத்தமிடும் சத்தமும் அதைத் தொடர்ந்து கன்னத்தில் அறை விழும் சத்தமும் கேட்டது!!!

ரயில் குகையிலிருந்து வெளிவந்து ரயில் பெட்டியில் வெளிச்சம் பரவியபோது, பயணிகள் அனைவரும் பாகிஸ்தானியின் கன்னம் சிவந்து வீங்கியிருப்பதை பார்த்தனர். பாகிஸ்தானி குழப்பத்துடன், "அந்த திருட்டு சர்தாஜி அந்த அழகிய பெண்ணை முத்தமிட முயன்று, அவள் தவறுதலாக என்னை அறைந்து விட்டாள்" என நினைத்துக் கொண்டான். அந்த பெண்ணோ, "அந்த பாகிஸ்தானி நான் என நினைத்துக் கொண்டு சர்தார்ஜியை முத்தமிட்டதால் அறைபட்டிருப்பான்!" என்று எண்ணினாள்!

நம் அன்புக்குரிய புத்திசாலி(!) சர்தார்ஜி, "இந்த ரயில் மீண்டும் ஒரு குகைக்குள் நுழைந்தால், அந்த இருட்டில், நானே, முத்தமிடுவது போல் இன்னொரு சப்தத்தை உண்டாக்கி, அந்த பாகிஸ்தானி முட்டாளை மறுபடியும் செவிட்டுல் அறைய வாய்ப்பு கிடைக்குமே!!!" என்று நினைத்துக் கொண்டார் :-)

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, April 17, 2005

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க - 4

அவசரப்படேல்!

ஒரு கடைநிலை மேலாளர், இடைநிலை மேலாளர் மற்றும் உயர் மேலாளர் ஆகிய மூவரும் ஓர் அலுவல் குறித்த முக்கிய சந்திப்புக்காக அவசரமாக சென்று கொண்டிருக்கும்போது, வழியில் ஓர் அதிசய விளக்கை பார்க்கின்றனர்.

அம்மாய விளக்கை எடுத்து தேய்த்தவுடன், ஒரு பூதம் அவர்கள் முன் தோன்றி, "நான் சாதாரணமாக ஒருவருக்கு மூன்று வரங்கள் தருவேன்! இங்கு நீங்கள் மூவர் இருப்பதால், ஆளுக்கொரு வரம் தருகிறேன்! கேளுங்கள்" என்றது.

இடைநிலை மேலாளர் முந்திக் கொண்டு, "நான் இப்பொழுதே பஹாமாஸ் அருகே உள்ள கடலில், ஒரு விசைப்படகில், எந்தவித கவலையுமின்றி பயணிக்க வேண்டும்!" என்றவுடன், பூதத்தின் அருளால், அவர் அவ்விடத்திலிருந்து மாயமாய் மறைந்து போனார்!

உடனே பொறுமையை இழந்த கடைநிலை மேலாளர், "நான் மியாமி கடற்கரையில், குறைவில்லா உணவு, மது வகைகளுடன் அழகிய பெண்கள் சூழ உல்லாசமாய் பொழுதை கழிக்க விரும்புகிறேன்!" என்றவுடன், அவரும் பூத அருளால் காணாமல் போனார்!

அதுவரை பொறுமையாய் இருந்த உயர் மேலாளர், பூதத்திடம் (தன் விருப்பமாக) அமைதியாகக் கூறினார், " அந்த இரு முட்டாள்களும், மதிய உணவிற்குப் பிறகு சரியாக 1 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும்!"

பாடம்: எப்போதும், உங்கள் மேலாளரை முதலில் பேச விடுவது சாலச் சிறந்தது!

****************************************

ஒரு மேலாளரின் பரிந்துரைக் கடிதம்

உயர் மென்பொருள் பொறியாளராக பணி புரியும் திரு.நாராயணன், எப்போதும்,

கடுமையாக உழைப்பவர். அவர் திறமையாக தனித்து செயல்படுவதோடு,

சக பணியாளர்களிடம் வம்பு பேசி நேரத்தை வீணாக்குவதை

விரும்புவதில்லை. அதற்கு நேர்மாறாக, பணியில் மற்றவருக்கு உதவுவதையே

பழக்கமாக கொண்டவர். அவர், கொடுத்த வேலையை நேரத்தில் முடிப்பதில்

மிகுந்த அக்கறை செலுத்துபவர்! அவர் பல சமயங்களில் மதிய உணவில் கூட

கவனம் செலுத்துவதில்லை! அவரிடம் அறவே இல்லாததாக நான் நினைப்பது

தலைக்கனமும் அரட்டையும்! பணியில் நிறைய சாதித்த அவரிடம் மிகுந்திருப்பது

வேலை சம்மந்தப்பட்ட நுண்ணறிவே. எனவே, திரு.நாராயணனை

நிறுவனத்தின் முக்கியப் பணியாளராகக் கருதி, அதிக வேலைச் சுமையிலிருந்து

நிரந்தரமாக விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், அவரை

பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கிறேன். அதை விடுத்து அவரை இதே பதவியில்,

பணியில் வைத்திருப்பது நல்லதல்ல என்று உறுதியாகக் கூறுகிறேன்!

சிறிது நேரத்திற்குப் பிறகு அதே மேலாளர் அந்த நிறுவனத்தின் மனித மேம்பாட்டுத் துறைக்கு ஒரு சிறு குறிப்பை அனுப்பி வைத்தார்.

"நான், இன்று காலை, உங்களுக்கு அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தை எழுதும்போது, அந்த அறிவிலி நாராயணன் என் அருகில் தான் இருந்தான்! எனவே, அக்கடிதத்தின் ஒற்றைப்படை வரிகளை மட்டுமே படித்து, நாராயணனைப் பற்றிய எனது கணிப்பை அறியவும் !!!!! நன்றி!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, April 09, 2005

Our Intelligent Captain!!!

நமது அதிபுத்திசாலி கேப்டன்!

இந்திய அணியின், பாகிஸ்தானுக்கு எதிரான, அவமானமிக்க பெங்களூர் டெஸ்ட் தோல்வியைத் தொடர்ந்து, அணி வீரர்கள் பொது மக்களிடம் தங்கள் முகத்தை காட்ட விரும்பாமல் தங்கள் ஹோட்டல் அறைகளிலிருந்து வெளியே வருவதை அறவே தவிர்த்தார்கள்!

ஆனால், திருவாளர் கங்குலிக்கோ, அறையில் அடைந்து கிடப்பதை விடவும், வெளியில் சென்று ஊர் சுற்றவும் ஷாப்பிங்க் செய்யவும் மிகுந்த ஆசை! எனவே, ஒரு சர்தாஜி போல மாறுவேடமணிந்து, ஹோட்டலை விட்டு வெளியே வந்தவுடன் ஒரு இளம்பெண், "ஹாய் சவுரவ்! எங்கே கிளம்பி விட்டீர்கள்?" என்றாள்.

ஆச்சரியப்பட்டுப் போன நமது கேப்டன் திலகம் விரைந்து தனது அறைக்கு சென்று, இம்முறை ஒரு முஸ்லிம் பெண் போல் உடை/புர்கா அணிந்து, ஹோட்டலை விட்டு வெளியே செல்ல யத்தனித்தபோது, முதலில் சந்தித்த அதே பெண், "ஹாய் சவுரவ்!" என்று கூறி புன்னகை பூத்தாள்!

துணுக்குற்ற நமது பெங்காலி பாபு, அறைக்கு சென்று கடைசி முயற்சியாக, மிகுந்த சிரமப்பட்டு தன்னை ஒரு ஹிப்பி போல சிங்காரித்துக் கொண்டு, ஹிப்பியின் நடை உடை பாவனையோடு ஹோட்டலை விட்டு வெளியேற முயன்றபோது, அதே பெண் மறுபடியும், "ஹாய்! சவுரவ்" என்றவுடன், மிகுந்த கடுப்பும், அதிர்ச்சியும் அடைந்த கங்குலி, "எப்படி நான் யாரென்று சுலபமாக கண்டு பிடித்து விடுகிறாய் ???" என வினவ, அந்த பெண் சிரித்தபடி கூறினாள், "தாதா! நான் தான் VVS லஷ்மண்!!!"

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, February 26, 2005

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க - 3

ஒரு மா·பியா கூட்டத் தலைவர் (GOD FATHER) தன்னுடைய வழக்கறிஞருடன், தன் கணக்கு வழக்குகளை கவனித்து வந்த (தான் இது வரை நேரடியாக சந்தித்திராத) தனது மாஜி கணக்காளரை சந்திக்கச் செல்கிறார். கணக்காளரிடம், "நீ என்னை ஏமாற்றிச் சுருட்டிய 50 லட்சங்களை எங்கு ஒளித்து வைத்திருக்கிறாய் என்று மரியாதையாக சொல்லி விடு!" என்று மிரட்டினார்.

உடனே அவருடைய வழக்கறிஞர், "அந்த ஆள் ஒரு செவிட்டு ஊமை! அதனால் நீங்கள் கேட்பது அவருக்குப் புரியாது. நீங்கள் சொல்வதை அவருக்கு நான் புரிய வைக்கிறேன்" என்றார். செய்கை மொழி வாயிலாக, ரூ. 50 லட்சம் எங்கே என வழக்கறிஞர் கணக்காளரை வினவினார். அதற்கு கணக்காளர், அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பதிலுரைத்தார்!

அதை வழக்கறிஞர் காட் ·பாதரிடம் மொழி பெயர்த்தவுடன், அவர் பயங்கரக் கடுப்பாகி, தன்னுடைய துப்பாக்கியை எடுத்து கணக்காளரின் நெற்றிப்பொட்டில் வைத்து, விசையை அழுத்தி, வழக்கறிஞரிடம், "இப்போது இந்த நாயைக் கேளுங்கள்!" என்றார். இதை ஊமை பாஷையில் விவரிக்க வேண்டிய கட்டாயம் வழக்கறிஞருக்கு ஏற்படாமலேயே, கணக்காளர் உயிர் பயத்தில், செய்கை மொழி வாயிலாக, "சொல்கிறேன், சொல்கிறேன்! அப்பணத்தை ஒரு பெட்டியில் வைத்து, அதை எனது வீட்டுக்குப் பின் இருக்கும் தோட்டத்தில் உள்ள முருங்கை மரத்தடியில் பதுக்கி வைத்துள்ளேன்!" என்று தானே உண்மை விளம்பினார்!


காட் ·பாதர் வழக்கறிஞரிடம், " என்ன, பணமிருக்கும் இடத்தைக் கூறி விட்டானா?" என்று வினவினார். வழக்கறிஞர் "அவன் சொல்கிறான், துப்பாக்கி விசையை அழுத்துவதற்கு வேண்டிய மனத்திடம் உங்களுக்குக் கிடையாது என்று !" என்றார்!!!
**********************************

ஒரு ஒளிபரப்பின் இடையே, முந்தைய நாள் பனி பெய்யும் (ஆனால் பெய்யவில்லை!) என்று அறிவித்திருந்த வானிலையாளரை நோக்கி, அவர் அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண் செய்தி வாசிப்பாளர், " என்ன கண்ணா, நீங்கள் நேற்றிரவு உறுதி செய்திருந்த அந்த எட்டு இன்சை (INCH) பார்க்க முடியலியே ?" என்றவுடன் அந்த வானிலையாளர் அவ்விடத்தை விட்டு ஓடியே போய் விட்டார் :-)
***********************************

CRICKET LOVE LETTER!


Its going to be cricketing days (Indo-Pak series!)...and everyone's going to be hooked on to cricket. You eat cricket, drink cricket, walk cricket and sleep cricket. How about this one? A lover writing to his beloved...

My dear Maiden.....

Yesterday, I happened to bump into your father. He was furious that I had bowled his maiden over. He warned me that I should not be seen in your gully anymore. He made it clear that he was against LBW (Love Before Wedding) and if we dared to give him the slip, then he would turn my long-leg to short-leg using his fine-legs(in short, he meant leg-break). I knew he meant business and that I was on a sticky-wicket. I didn't try any googly, instead dived for cover. I had to get a third-man involved for extra-cover. I am still worried about my life and so have engaged a night-watchman.You may think this is a silly-point but then your father is acting like a sweeper. I will stand at the boundary of your house. You may try to meet me at the pavilion and then we could consult the third-umpire.

Till then.... I Remain...

your debutant lover.

என்றென்றும் அன்புடன்

பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails